Thursday 24 April 2014

வாக்கு!


ஊர்கூடித் தேரிழுத்தல்
ஊருக்கு அழகு!
தேர்தல் எனும் தேர்வு
தேசத்திற்கழகு!


வாக்களித்து
வளைய வந்தவர்களில்
வாகை பெறுபவரை
வாக்களிக்கும் உரிமையுள்ளோர்
வாக்களிப்பால் தெரிவுசெய்வர்!

வாக்களித்த அடையாளம்
வளர்ச்சிக்கு அடையாளம்!

வாக்களிப்பில் களிப்புண்டு!
வளரும் நம் நாட்டின்
வாளிப்பும் அதிலுண்டு!

-பவித்ரா!

6 comments:

  1. //வாக்களிப்பில் களிப்புண்டு!
    வளரும் நம் நாட்டின்
    வாளிப்பும் அதிலுண்டு!//

    வாளிப்பான கவிதை அருமை.

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  3. நல்ல கவிதை.

    உங்கள் கவிதைக்கு எனது வாக்கு!

    ReplyDelete
  4. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா

    ReplyDelete